இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி; வெளிநாட்டு வருமானத்தில் இருந்து கடன்களை செலுத்தியமையே மிகப்பிரதானமான காரணம்

நாட்டின் அதிகாரம் படைத்தவர்கள் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு அடிப்படை காரணம் கொரோனா என்பதையே கூற முனைகின்றனர் . எனினும் அதில் முழுமையான உண்மை இல்லை என சில புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

புள்ளிவிவரங்களை நாம் நோக்கினால் ,2019 ஆம் ஆண்டில் 11% காணப்பட்ட GDP வரியானது 2021 ஆம் ஆண்டில் சடுதியாக வீழ்ச்சியடைந்து 8% GDP யாக கீழிறங்கியது.இதற்கு காரணம் 2019இல் ஆட்சிபீடமேறிய புதிய அரசு மேற்கொண்ட வரிவிலக்கல்கள் ஆகும்.

அந்த கால கட்டத்தில் , உலகில் வெறுமனே 6 நாடுகள் மாத்திரமே 8% குறைவான வரி விகிதாசாரத்தினை கொண்ட நாடுகள் என்பதுடன் இலங்கையும் அவற்றில் ஒன்று. நாட்டில் நிதி இல்லாத போது செலவீனங்களை குறைக்க வேண்டும். ஆனால் செலவீனம் அதிகரித்துச் சென்றதேயல்லாமல் வருமான வரி அதிகரிக்கவில்லை.

அத்துடன் 2019ஆம் ஆண்டில் 95.5% இருந்த வெளிநாட்டுக் கடன் 2021இல் 119.4% அதிகரித்தது. 2019 இலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை 24% அதிகரிப்பை இது காட்டி நிற்கின்றது.

தற்போதைய நிலையில் இலங்கை வெளிநாடுகளிடமிருந்து கடன் எதையும் பெற முடியாது. ஏனெனில் முன்னர் வாங்கிய கடன்களை இன்னும் செலுத்த போதுமான பணம் இல்லை.

2016ம்  ஆண்டு BB- என்ற நிலையில் இருந்த கடன் செலுத்தும் விகிதாசார புள்ளி, ஒக்டோபர் மாதம் 2020 இல் B- ற்கு சென்று 2021இல் CC நிலைக்கு சென்றுள்ளது.

இந்த விகிதாசார புள்ளியே இலங்கை எக்காலத்திலும் கடனை மீள செலுத்த முடியாது என்பதை தெளிவாக காட்டி நிற்கிறது.

நாடு செலுத்த வேண்டிய கடன் தொகை 2010 ஆம் ஆண்டு முதல் 2018 வரை 2.267 பில்லியன் அமெரிக்க டொலர். எனினும் 2021 லிருந்து 2025 வரையான காலப் பகுதிக்குள் இலங்கை 4.432 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கையின் வெளிநாட்டு வருமானம் 8000 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. பின்னர் அந்த பெறுமதி 2020 ஆம் ஆண்டு 2000 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கு காரணம் இலங்கை அரசு தனது வெளிநாட்டு வருமானத்தில் இருந்து கடன்களை செலுத்தியமையே ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *