
சீனாவும் இலங்கையும் நட்பு நாடுகள். இந்த நாடுகள் இரண்டும் பல
சந்தர்ப்பங்களில் பல சவால்களை இணைந்து வெற்றிக்கண்டுள்ளன என்று இலங்கைக்கான சீனத்தூதுவர் சீ செங்ஹெங் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தரவரிசைப்படுத்தல் நிறுவனம் இலங்கையை தரமிறக்கிய சந்தர்ப்பத்தில்
இலங்கைக்கு சீனா உதவியுள்ளது.
அத்துடன், சீனாவினால் 2.8 மில்லியன் நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி எந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் வழங்கப்படவில்லை.
2020 மார்ச் 18 ஆம் திகதி 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்கினோம்.
ஐந்து வீத வட்டிக்கே அந்த கடனுதவியை வழங்கினோம். அந்த கடனை மீள வழங்குவதற்காக 10 வருடகாலம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக 3 வருடங்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் இரண்டு நாடுகளின் வங்கிகளும் கொடுக்கல் வாங்கல்களுக்கு இணங்கியுள்ளன.
இதனூடாக இலங்கையின் அந்நிய சொவணியை அதிகரிக்கவே எதிர்பார்க்கின்றோம்.
அதுமாத்திரமல்லாது சர்வதேச நாடுகளுக்கு இலங்கை மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைளையே நாம் முன்னெடுத்து வருகின்றோம்
அதேவேளை, சர்வதேச நாடுகளின் மத்தியில் சீனாவின் நிறுவனங்களுக்கு இலங்கையில் முதலிடுமாறு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் எந்த சிக்கல்நிலை காணப்பட்டாலும் கொழும்பு துறைமுக நகரின் நிர்மாணப் பணிகள் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
அத்துடன், இலங்கை அரசாங்கம் தற்போது கடன் வேண்டுகோளான்றை விடுத்துள்ளது. இந்நிலையில் சீன அரசாங்கம் அது தொடர்பிலேயே ஆராய்ந்து வருகின்றது- என்றார்.