பசில் இந்தியாவிடம் என்ன நிபந்தனையில் கடனை பெற்றார்? தெளிவுபடுத்த வேண்டுகிறார் விஜயபால

நிதியமைச்சர் பசில் இந்தியாவிற்கு சென்று என்ன நிபந்தனையின் பிரகாரம் இந்தியாவிடமிருந்து கடன் பெற்றார் என்பதை நாட்டிற்கு தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இன்று நாடு தீர்மானமிக்க நிலைக்கு வந்துள்ளது. 1994 ஆம் ஆண்டு முதல் கடந்த 29 வருடங்களுக்கு மேலாக இந்நாட்டை தொடர்ச்சியாக ஆட்சி செய்தது சுதந்திர கட்சி கூட்டமைப்பாகும்.

இன்று நாடு இத்தகைய வக்குரோத்து நிலைக்கு கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட இந்த அரசாங்கமே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

ஆட்சிக்கு வந்து உடனயே அரச வரிவாய் இழப்பு,எண்ணெய் மற்றும் சீனி மோசடிகளை மேற்கொண்டவர்கள் யார் என்று அரசாங்கத்திடம் கேட்கிறோம்.

மறுபக்கம் தன்னுறைவு கண்ட விவசாயம்,அது சார்ந்த உற்ப்பத்தி,ஏனைய சிறு தோட்டச் செய்கை சார்ந்த உற்ப்பத்திகள்,தேயிலை உள்ளிட்ட பயிர்ச் செய்கைகளை வேண்டும் என்றே இரசாயன உர விவகாரத்தை கொண்டு வந்து டொலர் பற்றாக்குறையை ஏறப்படுத்தியவர்கள் இந்த ஆட்சியாளர்களே.

கோட்டாபாய உள்ளிட்ட தற்போதைய ஆட்சியாளர்களே இதற்கு பொறுப்புக் கூற வேண்டும்.

கொவிட் விவகாரத்தில் ஏலவே சஜித் பிரேமதாச கூறிய விடயங்களுக்கு கேலி செய்தனர். இறுதியில் காலம் கடந்து அவர் கூறிய விடயங்களையே நடைமுறைப்படுத்தினர்.

சீசல் நாடு குறுகிய காலத்திற்கு நாட்டை முடக்கி வினைதிறனாக கொவிட்டை முகாமைத்துவம் செய்து இன்று சுற்றுலாத்துறையில் கொடி கட்டிப்பறக்கிறது.

ஏன் இலங்கையால் முடியாது போனது. இந்த ஒரு தலைபட்ச தீர்மானம் எடுக்கும் அரசாங்கமே இதற்கு பொறுப்பெடுக்க வேண்டும்.

சகல அரசாங்களும் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றன.

இன்று தற்போதைய அரசாங்கமே இழுத்தடிப்புச் செய்த வண்ணமுள்ளது. சர்வதேச நாணய நிதியம் நிதிகளை வெறுமனே ஒப்படைப்பதில்லை.

கட்டுப்பாடுகள் விதிமுறைகளை பிறப்பிக்கும். தமக்கு மோசடி ஊழல் எண்ணப்பாடுகள் இல்லாவிடின் ஏன் பின்வாங்க வேண்டும்.

நாடு இவ்வளவு வக்குரோத்து நிலையை அடைந்துள்ள பின்னனியில் கூட சர்வதேச நாணய நிதியத்தை நாடாமல் உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *