விலை உயர்வால் முட்டை கூட சாப்பிட முடியவில்லை! பேரவலத்தில் பொது மக்கள் 

முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

நாட்டில் தொடரும் விலையேற்ற நிலைமைகளால் பொது மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

தற்போது முட்டையின் விலை 32 முதல் 33 ரூபாய் வரையிலும், கோழி இறைச்சி 850 முதல் 900 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

முட்டை, கோழி இறைச்சி விலை உயர்வால் முட்டை சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கோழி மற்றும் முட்டை வியாபாரிகள், கோழி தீவனத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *