வலுசக்தி அமைச்சரின் வாகன ஓட்டுநர் கொலை

கொழும்பு, மார்ச் 22: வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் வாகன சாரதி கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை – மாவிட்ட பகுதியில் நடந்த இந்த சம்பவம் தனிப்பட்ட பகையால் நடந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் கெஸ்பேவ – மாவித்தர பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *