
கொழும்பு, மார்ச் 22: முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கை திங்கட்கிழமை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக, “எந்தவொரு ஆரோக்கியமான ஜனநாயகத்திலும் துடிப்பான அரசியல் எதிர்ப்பு இன்றியமையாதது” என்று ஜுலி சுங் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்றைய அவசர பொருளாதார சவால்களுக்கு நிலையான தீர்வுகளை காண அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து செயல்படும் வழிகள் குறித்து விவாதிப்பதற்காக ரணில் விக்ரமசிங்கவை சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.