ஆழ்கடல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: தொலைபேசியில் உரையாடிய டக்ளஸ் தேவானாந்தா

கொழும்பு, மார்ச் 22: கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள கடற்றொழில் அமைச்சின் முன்பாக
ஆழ்கடல் தொழிலில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டால் தாம் அடைந்துவரும் இடர்களை நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்தில் நின்றிருந்த கடற்றொழில் அமைச்சரின் இணைப்பாளர் ஸ்ராலின், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருடன் கலந்துரையாடியதுடன் யாழில் தங்கியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தொலை பேசியில் உரையாடும் வாய்ப்பையும் உருவாக்கி கொடுத்திருந்தார்.

சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு யாழ் தலைமைக் காரியாலயத்தில்
தங்கியிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தொலை பேசியில் உரையாடினார்.

விரைவில் தான் நேரில் வந்து சந்திப்பதாகவும் நிலமைமைகளை விளக்கி தீர்வு பெற்று தருவதாகவும்
தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவின் உறுதி மொழிகளை ஏற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட
தென்னிலங்கை ஆழ்கடல் மீன்பிடித்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அண்மையில் பிரதமரின் யாழ் விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜன் பரிசோதனையில், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *