ஹிட்லரிடம் இருந்து தப்பித்து புதினால் கொல்லப்பட்ட நபர்

கீவ், மார்ச் 22

உக்ரைன் மீது ரஷ்யா 27-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இருந்தாலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.

இதனால் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் ஜெர்மனி நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லர் நடத்திய நாஜி வதை முகாம்களில் இருந்து தப்பிய 96 வயது முதியவர் ரஷிய ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் போரிஸ் ரோமன்சென்கோ. இவருக்கு வயது 96. இவர் உக்ரைன் நாட்டின் கார்கிவ் பகுதியில் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்ய ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் இவர் உயிரிழந்தார். இது குறித்து உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *