பாதுகாப்பு கடமையில் எரிபொருள் நிலையங்களில் இராணுவத்தினர்

கொழும்பு, மார்ச் 22

இன்று முதல் அனைத்து சிப்பெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இராணுவத்தினர் எரிபொருள் விநியோகத்தை மேற்பார்வை செய்வதற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிக கூட்டங்கள் கூடுவதனால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற. இதன் காரணமாக பாதுகாப்பு நோக்கங்கள் கருதி இலங்கை முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வன்முறையில் ஈடுபட்டு ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *