
கொழும்பு, மார்ச் 22
தெற்காசியாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நோலண்ட், இன்று இலங்கையை வந்தடையவுள்ளார்.
இதற்கமைய பங்களாதேஷ் சென்றிருந்த அவர் நேற்றைய தினம் இந்தியாவை சென்றடைந்துள்ளார். இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரிங்லா உள்ளிட்டோரை அவர் சந்தித்துள்ளார்.
இதன்போது அமெரிக்க – இந்திய உறவு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நோலண்ட், தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் இன்று பிற்பகல் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நோலண்ட், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர், கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டு வர்த்தக சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளார்.