உக்ரைனில் தரைவழியில் ரஸ்யாவுக்கு பின்னடைவு! முதல் தடவையாக ஏவிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை!

உக்ரைன் போரில் ரஸ்யா, தமது ஹைப்பர்சொனிக் ஏவுகணையை பயன்படுத்தியதைக் கொண்டு, அதன் தரைவழி முன்னேற்றத்தின் தாமதத்தை கணிக்கமுடியும் என்று இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக, ரஸ்யா, மேற்கு உக்ரைனில் உள்ள இலக்குகளை நோக்கி முதன்முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவியது.

இந்த ஏவுகணை மணிக்கு 6,000 கிமீ வேகத்தில் 2,000 கிமீ (1,240 மைல்) தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் என்று ரஸ்ய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனால் பாரிய அழிவுகளை ஏற்படுத்தமுடியும் என்றபோதிலும் ரஸ்யாவின் பிரசாரத்துக்கு இது உதவாது என்று இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை உக்ரைனில் ரஸ்யாவின் பின்னடைவுக்கு,போரின் நிலைமையை இன்னும் போதுமான அளவு மதிப்பிட ரஸ்யா தவறியமையே காரணம் என்று உக்ரைன் தெரிவித்;துள்ளது.எனினும் இந்த பின்னடையே இரண்டு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைக்கு வழியை ஏற்படுத்தியது என்று உக்ரைனிய ஜனாதிபதியின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.இந்த பேச்சுவார்த்தையில் அமைதி குறித்து ஏதாவது இணக்கம் ஏற்படும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை தலைநகர் கியேவின் குடியிருப்புப் பகுதி மற்றும் மீது ரஸ்யர்கள் நடத்திய எறிகனை தாக்குதலால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று மாலை முதல் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை 07:00 மணி வரை நகரத்தில் ஊரடங்கு உத்தரவை கிய்வ் நகர முதல்வர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *