இந்தியா – ஆவுஸ்ரேலியா இடையிலான முதலீட்டை அதிகரிக்க இணக்கம்!

இந்தியா – ஆவுஸ்ரேலியா இடையிலான முதலீட்டை அதிகரிக்க இருநாட்டு பிரதமர்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியுறவுச் செயலாளர் ஹர்சவர்த்தன் சிரிங்லா தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், ”தூர்தர்சன் நிகழ்ச்சிகளை அவுஸ்ரேலியாவில்  ஒளிபரப்ப அந்நாட்டு ஒலிபரப்புச் சேவையுடன் பிரசார் பாரதி புரிந்துணர்வு உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.

இந்தியாவின் உட்கட்டமைப்புத் திட்டங்களில் அவுஸ்ரேலியாவின் முதலீட்டை ஈர்க்க அந்நாட்டில் உள்ளதைப்போல் வரிச்சலுகை அளிக்க இந்தியா முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் அவுஸ்ரேலியாவின் முதலீடு ஒரு இலட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாயாகவும், அவுஸ்ரேலியாவில்  இந்தியாவின் முதலீடு 91 ஆயிரம் கோடி ரூபாயாகவும் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *