யாழில் 3ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாண நகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளுடன் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளர்.

கைது செய்யப்பட்டவரிடம்  இருந்து 3000 சட்டவிரோத போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *