
அம்பாறை, மார்ச் 22
அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளாறு மயில்லோடை வயல் பகுதியில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்மாந்துறை, விளினையடியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 68 வயதுடைய மேற்படி குடும்பஸ்தர், நேற்று (21) வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே, யானையின் தாக்குதலுக்கு இலக்காகி, ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.