சர்வதேச வனாந்தரங்கள் தினத்தினை முன்னிட்டு ,யாழ் மாவட்ட வனவள பாதுகாப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில்,இன்று காலை யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் திண்மக்கழிவுகள் அகற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது பாதுகாக்கப்பட்ட வன பகுதியாக காணப்படும் மண்டைதீவில், கண்டல் தாவரங்களுக்கிடையில் காணப்பட்ட திண்மக்கழிவுகள் ,வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர்,மற்றும் கடற்படையினரால் அகற்றப்பட்டது.
நிகழ்வில் வட்டார வன அதிகாரி டிஎம் டி ஆர் கருனாநாயக்க, பகுதி வன அதிகாரி வட தீவுகள் எஸ் உதயதீபன் ,பகுதிவன அதிகாரி மானிப்பாய் ஜி எம் எசி முகேந்திரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
