மேலதிக வரிச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல – உயர் நீதிமன்றம்

மேலதிக வரிச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதற்கமைய நாடாளுமன்றில் சாதாரண பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்ற முடியுமென சபாநாயகரிடம் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலபிட்டிய இதனை சபையில் தெரிவித்தார்.

அவைத்த தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் கடந்த மாதம் மேலதிக வரிச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

2000 மில்லியன் ரூபாய்க்கு அதிகமாக வரி அறவிடக்கூடிய வருமானத்தை ஈட்டும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு 25 சதவீத மேலதிக வரியை அறவிட அரசாங்கம் தீர்மானித்தது.

அதன்படி ஒரு தடவை மாத்திரம் அறிவிடப்படும் 25 சதவீத மேலதிக வரி தொடர்பான குறித்த சட்டமூலத்திற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

இதனை அடுத்து குறித்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சிகள் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.

அந்தவகையில் மேலதிக வரிச் சட்டமூலத்தில் EPF, ETF உட்பட 13 நிதியங்கள் உள்ளடக்கப்படாத வகையில் திருத்தம் செய்யப்படும் என சட்டமா அதிபர் நீதிமன்றில் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *