
கிராம மட்டத்திலிருந்து அபிவிருத்தி என்ற போர்வையில்,மொட்டு கட்சி அலுவலங்கள் நிறுவப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் இப்போது பட்டினியில் உள்ளனர்.எல்லாவற்றுக்கும் வரிசை யுகம் ஏற்பட்டுள்ளது.
எரிபொருள்,சமையல் எரிவாயு ,பால்மா ,நீர் கட்டணம், மின்சார கட்டணம் எல்லாவற்றிலும் பிரச்சினை காணப்படுகிறது.
நாடு கடனில் மிதக்கிறது. இந்த நிலையில் 14 ஆயிரம் கிராம சேவகர் பிரிவுகளில் ,பல்வேறு திட்டங்களை அரசு தற்போது ஆரம்பித்துள்ளனர்.
இதன் நோக்கம் கிராம மட்டத்தில் அபிவிருத்தியை மேற்கொள்வது அல்ல. மறைமுகமாக 14 ஆயிரம் கிராமங்களில் மொட்டு கட்சி அலுவலகத்தை நிறுவுவது மட்டுமே, சற்று சிந்தியுங்கள்.
மக்களின் பிரச்சினைக்கு என்ன செய்யலாம் என்று கூறுங்கள் என்றார்.