
எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது.
அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
எரிபொருள் மற்றும் எரிவாயுவு கொள்வனவிற்காக நாடாளாவிய ரீதியில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அத்தோடு பல இடங்களில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டமும் இடம்பெற்றுவரும் நிலையில் அரசாங்கம் இதனை அறிவித்துள்ளது.