
எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேயின் சாரதி நேற்று மாலை கெஸ்பேவவிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து இனந்தெரியாத சிலரால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பதோடு கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
களுபோவில பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.