மன்னாரில் இருந்து அகதிகளாகச் சென்ற ஆறுபேரையும் மீட்ட இந்திய கடற்படை உடனடியாக அவர்களுக்கு உணவு, குளிர்பானம் , சிறுவர்களிற்கான பால்மா வகைகளை வழங்கி அகதி முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளது.
மன்னாரில் இருந்து ஓர் படகு மூலம் தப்பிச் சென்ற ஆறு பேர் இராமேஸ்வரம் அரிச்சல் முனையில் உள்ள திடல் தரையில் இறங்கியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அருகே உள்ள இந்திய கடல் பகுதியான 4ஆம் மணல் திட்டில் 1 ஆண், 2 பெண்கள் 3, குழந்தைகள் அடங்கிய இலங்கை தமிழர்கள் 06 பேரை இறக்கி விட்டு படகு திரும்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அரிச்சல் முனையின் நான்காவது திடலில் தரை இறங்கிய குடும்பத்தை மீட்க இந்தியாவின் கரையோர காவல்படை குறித்த இடத்திற்குச் சென்றுள்ளது.
இதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அகதிகள் வரலாம் என்ற எதிர்பார்ப்பில் தமிழக கரையோரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
