மரக்கிளை முறிந்து வீழ்ந்து ஆசிரியர் உயிரிழப்பு!

தலவாக்கலை – லோகி தோட்ட சந்தியில் வெட்டப்பட்ட மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லோகி தோட்ட சந்தியில் பிரதான வீதி ஓரத்திலிருந்த பாரிய மரமொன்றின் கிளையை வெட்டியபோது, மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது மரக்கிளை வீழ்ந்துள்ளது.

இதன்போது பலத்த காயமடைந்த நபர், லிந்துலை மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற போது உயிரிழந்துள்ளார்.

தலவாக்கலை பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் கணித பாட ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த ஆசிரியரின் உயிரிழப்புக்கு நீதி கோரி ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *