ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்கின்றோம்! – சுகாஷ்

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும்,

தமிழர் தாயகத்தில் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை திட்டமிட்டுத் தீவிரமாகத் தொடர்ந்து கொண்டும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கும் சிந்தனை அறவேயின்றியும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டைப் பொருளாதார ரீதியாக அதலபாதாளத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.

இதன்மூலம் மக்களையும் சர்வதேசத்தையும் அரசு எதிர்கொள்ள முடியாது சிக்கித் திணறுகிறது.

அவ்வாறு எதிர்கொள்ளும் நெருக்கடிகளைத் திசை திருப்புவதற்காகவும் அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் நாளைய தினம் நடாத்தும் அரசியல் நாடகமான சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்டு ஜனாதிபதியைக் காப்பாற்றவோ அவருக்கு உயிர் கொடுக்கவோ விரும்பாத காரணத்தால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்து சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிப்பது என்ற முடிவை இனம் சார்ந்து எடுத்துள்ளது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *