
யாழ். போதனா வைத்தியசாலைக்கு நிரந்தர பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் (End post Consultant) ஒருவருக்கு நியமன வெற்றிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், யாழ் போதனா வைத்திய சாலைக் கிளையினர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் ஊடக அறிக்கையில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண மக்களின் வைத்திய சேவையை மேம்படுத்தும் பொருட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு இரண்டாவது பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் கட்டாயமாக நியமிக்கப்பட வேண்டிய தேவை இருந்தது.
இவ்விடயம் சம்பந்தமாக யாழ் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பல தடவைகள் வைத்தியசாலை நிர்வாகத்திடத்தினரிடமும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்திருந்தும் வைத்தியசாலை நிர்வாகம் இரண்டாவது நிரந்தர பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் வெற்றிடத்தை உருவாக்குவதில் ஆர்வத்தைக் காட்டவில்லை.
அத்துடன் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரது முயற்சிகளுக்கு தடையாகவும் இருந்தது.
யாழ். போதனா வைத்திய சாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் தாய்ச் சங்கமும் பல தடவைகள் சுகாதார அமைச்சுடனும், வட பகுதிக்குரிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் இவ் விடயம் சம்பந்தமாக தெளிவுபடுத்தலை உண்டாக்கி பல முறை வேண்டுகோள் விடுத்தும் கடும் பிரயத்தனத்தின் பின்னரே இரண்டாவது நிரந்தர பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வெற்றிடம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக எமது தாய்ச்சங்கத்திற்கும், சுகாதார அமைச்சிற்கும், மற்றும் எமது பாராளுமன்ற உறுப்பினர்களிற்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில்: