மின்கட்டணம் 500% உயரும்!

தற்போதுள்ள மின்கட்டணத்தை விட 500 சதவீத்தால் மின்கட்டணத்தை உயர்த்தும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மின்கட்டணத்தை உயர்த்தும் யோசனையின் கீழ் எதிர்பார்க்காத அளவு மின்சாரக்கட்டணம் அதிகரிக்கக்கூடும். அதனை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத.

இன்று அல்லது நாளை மின்கட்டணம் அதிகரிக்கப்படும். 25 முதல் 50 சதவீதத்தால் கட்டணம் அதிகரிக்கப்படுமா? என்பது குறித்து தெரியவில்லை.

கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய மின்சார சபை முன்வைத்துள்ள யோசனைக்ப்படி, முன்னர் காணப்பட்டதை விடவும் 500 சதவீதத்தால் அதிகரிக்கும்.

மின்சாரத்தைப் பயன்படுத்தாது எதிர்வரும் நாள்களில் மின்குமிழ் மற்றும் மின்விசிறி என்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைதான் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *