யாழ். பொது நூலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு!

யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில், சர்வதேச மகளிர் தினமானது இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், உள்ளுராட்சி அமைச்சர் இலட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு சாந்தாதேவி தர்மரட்ணம் தலைமையில் யாழ்.மாவட்ட உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் யாழ்.மாவட்ட குடிசார் அமைப்புக்களின் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, குறித்த ஏற்பாட்டாளர்களால் 10 கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *