பயங்கரவாதத்தின் நவீன அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண புதிய சட்டம் வேண்டும் – ரணில்

பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நாடளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நவீன பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்கும் போது புலனாய்வு அமைப்பும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என ணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

புதிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உருவாகலாம் என்பதனால் புதிய சட்டத்தை கொண்டுவந்து இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ள நாடு தயாராக இருக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *