<!–
வவுனியாவில் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்வதற்காக விவசாயிகளும் இல்லத்தரசிகளும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையை அவதானிக்க முடிந்தது.
வவுனியாவில் இரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே இன்று மண்ணெண்ணை வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குடும்ப உறுப்பினர்கள் உள்ள அட்டைக்கு மாத்திரம் 1000 ரூபாவுக்கு மண்ணெண்ணை விநியோகிக்கப்படும் எனவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மற்றைய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 500 ரூபாவுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை டீசலை பெற்றுகொள்வதற்காகவும் நீண்ட வரிசையில் வாகனங்கள் பல மணி நேரமாக காத்திருக்கும் நிலையையும் அவதானிக்க முடிந்தது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.