
கொழும்பு, மார்ச் 22: தேவையேற்படும் பட்சத்தில் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு வரும் காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜாங்க அமைச்சர் சனத் நிஸாந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார நாடாளுமன்றின் இன்றைய எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பாக, இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் தேவையேற்படும் பட்சத்தில் நீர் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.