
கொழும்பு, மார்ச் 22: சமுத்திர மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு நிலையத்தை நிறுவ, இந்திய அரசாங்கத்திடம் இருந்து உதவித் தொகையை பெற்றுக்கொள்ள இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த ஒருங்கிணைப்பு நிலையத்தை நிறுவுவதற்கு 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது. இதற்கான இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை செவ்வாய்க்கிழமை அனுமதியளித்துள்ளது.
இதன்படி, இலங்கை அரசாங்கத்திற்கும், இந்தியாவின் பாரத் இலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்திற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.