
கொழும்பு, மார்ச் 22: அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்காததால் சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்கவில்லை என்று ராஜாங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இதொக) கட்சியின் பொதுச் செயலருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் நடைபெறவுள்ள சர்வகட்சி கூட்டத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவி ஒன்றை வழங்க அரசாங்கம் மறுத்ததால், இந்த முடிவை இதொக எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக ஜீவன் தொண்டமான் கூறுகையில் “சர்வகட்சி கூட்டத்தின் மீது நம்பிக்கையில்லை என்பதாலேயே, இந்தக் கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என்றார் அவர்.