
என்னைக் கைது செய்த பயங்கரவாத சட்டம் தொடர்பில் இன்று உரையாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என நாடளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதச் சட்டம் வேண்டும் வேண்டாம் என்று நடுநிலையாக கூற வேண்டிய நிலையில் நான் உள்ளேன். ஏனென்றால் 5 வருட சிறை தண்டனையை இந்த சட்டம் தான் எனக்கு கொடுத்தது. இது தவிர வடக்கு கிழக்கில் தமிழ் இளைஞர்கள் இந்த சட்டத் தால் இன்னமும் சிறையில் இருக்கின்றனர். ஆகவே சட்டம் திருத்தப்பட வேண்டும்,அத்துடன் நீடித்த அமைதிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்தால் நன்று.- என்றார்.