
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புத்தூர் கலைமதி ஹிந்து சிட்டி பகுதியில் பாடசாலை செல்லும் 8 வயதுச் சிறுமியை பாலியல் துஷ் பிரயோகம் செய்த 14 வயது சிறுவனை அச்சுவேலியிலுள்ள சான்று பெற்ற அரச நன்னடத்தைப் பாடசாலையில் தடுத்து வைக்க யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே சிறுவன் கைது செய்யப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.