நிதி நெருக்கடி தொடர்பாக பொருளாதார சபை கூட்டத்தில் ஆலோசனை

கொழும்பு, மார்ச் 22: தற்போதைய நிதி நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக பொருளாதார சபைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஜனாதிபதிக்கும் பொருளாதார சபைக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “சர்வதேச நாணய நிதியத்தை கையாள்வதில் தொழிநுட்ப உதவிகளை பெறுவதற்கு தேவையான வழிமுறைகள் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக’ தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *