மகா சங்கத்தினர் மீதும் இனி பயங்கரவாத தடைச்ச சட்டம் பாயும்! – தமிழ் எம்.பி எச்சரிக்கை

தமிழ் பெண்களை மானபங்கப்படுத்துவதற்காக விசேடமாக தயாரிக்கப்பட்டவையே தான் இந்த பயங்கவாத தடைச் சட்டம் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.

தமிழ் இளைஞர்களை எந்த நேரம் கைது செய்யவும், துப்பாக்கியால் சுடவும், தமிழ் பெண்களை மானபங்க படுத்தவும், மட்டுமே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதனால் தமிழ் இளைஞர்கள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கின்றனர். தமிழ் மக்களை மட்டும் இலக்கு வைத்த இந்தச் சட்டம் அடுத்து முஸ்லீம் சமூகத்தினர் மற்றும் மகா சங்கதிரனையும் கைது செய்யும் நாள் தொலைவில் இல்லை. இந்த சட்டம் திருத்தம் என்ற நாடகம் வேண்டாம். சட்டம் அகற்றப்பட வேண்டும். – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *