
கடந்த இரு நாட்களாக இந்திய இழுவைப் படகுகள் 3 மைல் தொலை தூர அளவில், நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு போன்ற பகுதிகளில் சட்டவிரோதமான இழுவை மடி கைத்தொழிலை மேற்கொண்டு வருவதாக கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அ.அன்னராசா தெரிவித்திருந்தார்.
இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியிருந்தார் .
இதன்படி இத்தீவுகளைச் சேர்ந்த மீனவர்கள் கடற்தொழிலை மேற்கொள்ள சென்றிருந்த வேளை அங்கு 30 க்கு மேற்பட்ட படகுகளை அவதானித்ததோடு தங்களின் இழுவைத் தொழிலை மேற்கொள்ளாது திரும்பியுள்ளனர்.
நாட்டின் தீவுப்பகுதி மீனவர்கள் தற்போதைய எரிபொருள் நெருக்கடியால் இழுவைத் தொழிலை மேற்கொள்ளாது சிரமப்படும் அதேவேளை, இந்திய மீனவர்களின் சட்டவிரோதமான வருகையால் மேலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இம்மீனவர்களின் கோரிக்கைக்கிணங்க இலங்கை வடபிராந்திய கடற்படை மற்றும் கலாநிதி ஜே.சங்கராஜா இந்திய மீனவர்களின் சட்டவிரோதமான இழுவை மடி கைத்தொழிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் கூறியிருந்தார்