சர்வ கட்சிகள் மாநாட்டில் பங்கேற்கும் தமிழரசுக்கட்சி

கொழும்பு,மார்ச் 22

சர்வ கட்சிகள் மாநாட்டில் தமிழரசுக்கட்சி மாத்திரமே கலந்து கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பல்வேறு கட்சிகள் இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதில் கலந்து கொள்ளும் என்று அதன் பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அறிவித்திருந்தார்.

ஆனால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரொலோ இதில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.

இதேவேளை. சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்காதிருக்க ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *