
கொழும்பு. மார்ச் 22
சர்வதேச நாணய நிதியத்தின், இலங்கை தொடர்பான அறிக்கை இன்னமும் நிதி அமைச்சுக்கு உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்படவில்லை. அவ்வாறு கையளிக்கப்பட்டதும். அது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் செயான் சேமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.