வாடகை குடியிருப்பாளருக்கு மகிழ்ச்சியான செய்தி

குறைந்த வருமானம் பெறும் வாடகைக் குடியிருப்பாளர்களுக்கான வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிலம் மற்றும் வீடுகள் இல்லாத காரணத்தால் குறைந்த வசதிகளுடன் வசிக்கும் வாடகைக் குடியிருப்பாளர்களின் வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

இத்திட்டம் கிராமப்புற வீட்டு வசதி, கட்டுமானம் மற்றும் கட்டடப் பொருள் தொழில் அபிவிருத்தி அமைச்சால் செயற்படுத்தப்படும்.

இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் 4 மாடி குடியிருப்புத் தொகுதிகள் மற்றும் 9 வீட்டுத் தொகுதிகள் 464 வீடுகளை உள்ளடக்கியதாக நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகள் முதற்கட்டத் தொகையைச் செலுத்த முடியாது விடின் 31 ஆண்டுகளுக்கு மாத வாடகையாக ரூ.15,000 வசூலிக்கப்படும்.

தொடர்புடைய வீட்டு நீட்டிப்பு இரண்டாவது அல்லது மூன்றாம் தலைமுறையினர் வீட்டின் உரிமையை மாற்றுவதற்கும், பயனாளிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கும் ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தக் காரணத்துக்காகவும் வீட்டை விற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *