வடமராட்சி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல், டீசல் இல்லாத நிலை

யாழ்ப்பாணம் – வடமராட்சியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல், டீசல் இல்லாத நிலை காணப்படுகிறது.

அத்துடன் மண்ணெண்ணெய்க்கு மக்கள் நீண்டவரிசையில் காத்திருப்பதை காணமுடிகின்றது.

வடமராட்சி பகுதியில் உள்ள புறாப்பொறிக்கி, நெல்லியடி, மந்திகை, ஓராங்கட்டை ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல், மற்றும் டீசல் என்பன தீர்ந்துள்ளன.

மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மட்டும் மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்றுவருகிறது.

மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் நீண்டவரிசையில் நின்று கொள்கலன்களில் பெற்றுச் செல்வதை அவதானிக்க முடிகிறது.

இதேவேளை நெல்லியடி கட்டைவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கம் தமது விற்பனை நிலையங்கள் ஊடாக குடும்ப பங்கீட்டு அட்டைக்கு இரண்டு லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *