
பயங்கரவாத தடுப்பு திருத்த சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்களிப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா. சம்பந்தன், தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சி. வி. விக்னேஸ்வரன் ஆகியோர் பங்கேற்கவில்லை.
வாக்கெடுப்புக்கான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது இருவரும் சபையில் இருந்தனர். ஆனால், வாக்கெடுப்புக்கான அழைப்பு விடுக்கப்படுவதற்கு சற்று முன்னர் சபையிலிருந்து வெளியேறினர் எனத் தெரியவருகின்றது.