அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டித் தொடர் 2021 விருது வழங்கும் நிகழ்வு நாளை கொழும்பில்

அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டித் தொடர் 2021 விருது வழங்கும் நிகழ்வு நாளை கொழும்பில்

(கலைஞர்.ஏ.ஓ.அனல்)

அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டித் தொடர் 2021 இல் வெற்றிபெற்ற ஆளுமைகளுக்கான  விருது வழங்கும் நிகழ்வானது 2022/03/23 ஆம் திகதி பி.ப 2 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கெளரவ பிரதமர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மஹிந்த ராஜபக்ச அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் வெற்றி பெற்ற அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் கெளரவிக்கப்படவுள்ளர்.

புத்தசாசனம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு வருடா வருடம் இவ்வாறான நிகழ்வுகளை நடாத்தி சிறந்த ஆளுமைகளை பாராட்டி சான்றிதழ் மற்றும் பெறுமதியான பரிசில்களை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *