மட்டக்களப்பு – கல்லடி பாலத்தின் கால்வாய்க்குள் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று மதியம் மீட்கப்பட்டள்ளது. பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய, பொலிஸார் இந்த சடலத்தை மீட்டுள்ளனர். சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
குறித்த பெண், கொலை செய்யப்பட்டுள்ளாரா? அல்லது வேறு காரணிகளால் அவர் உயிரிழந்தாரா? என்பது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
