ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளைய தினம் (23) இடம்பெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி, இந்த மாநாட்டைப் புறக்கணித்துள்ள நிலையில், அதன் பங்காளிக் கட்சி என்ற அடிப்படையில், மாநாட்டில் பங்கேற்காதிருக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் நிஷாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.