
யாழ்ப்பாணம், மார்ச் 23: யாழ்ப்பாண நகரில் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யும் இடத்தில் செவ்வாய்க்கிழமை குழப்பம் ஏற்பட்டது. இதனால், மக்களிடையே மோதல் நிலை ஏற்பட்டது.
யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதி, கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலைக்கு முன்பாக வெற்று எரிவாயு சிலிண்டர்களுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதன்போது, பொதுமக்கள் குடும்ப பங்கிட்டு அட்டையுடன் வெயிலையும் பொருட்படுத்தாது பல மணி நேரம் காத்திருந்த போதும் மட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு மாத்திரமே எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டது.
இதனால் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.