எரிபொருள் இன்மையால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் விடுத்த கோரிக்கை

ஏழாயிரத்து 600 படகுகள் இருக்கும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஆயிரம் படகுகள்கூட கடலிற்கு செல்ல முடியாத அவலமே காணப்படுவதாக வடக்கு மாகாண மீனவர் சமாசத் தலைவர் அன்னராசா தெரிவித்தார்.

இலங்கையில் நிலவும் எருபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக மீனவர்களால் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இதன் காரணமாக வடக்கு மாகாணம் முழுமையாகவே இந்த அவலம் காணப்பட்டாலும் உடனடியாக கையில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் குடாநாட்டில் கடந்த வாரம் ஆயிரம் படகுகள்கூட தொழிலிற்குச் செல்லவில்லை.

இந்த விடயத்தை திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது மீனவரகளிற்கு 40 லீற்றர் வழங்கப்படும் என்றனர்.

நாள் ஒன்றிர்கு 40 லீற்றர் வழங்கப்படும் என நாம் எண்ணினோம்.

அவ்வாறு அன்றி வரும் நாட்களில் 40 லீற்றர் எனில் அது ஒரு வாரமோ அல்லது அதற்கும் மேலாகுமா என்பதும் தெரியவில்லை.

கடற்றொழிலாளர்களிற்கு நாளாந்தம் 40 லீற்றர் தேவைப்படும் நிலமையில் குறைந்தபட்சம் வாரந்திற்கு இரு நாட்கள் என்ற அடிப்படையில் தலா 40 லீற்றர் எரிபொருளேனும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *