ரஷ்யாவில் சீனிக்கு அடிபடும் மக்கள் (வீடியோ)

 உக்ரைன் மீது ரஷ்யா 28-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபேச்சு இருந்தாலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.

இதனால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைன்- ரஷியா இடையிலான போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. 2015 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவில் வருடாந்த பணவீக்கம் மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது.

அதுமட்டுமின்றி பொருளாதார தடை எதிரொலியால் ரஷ்யாவில் சீனியின் விலை உயர்ந்துள்ளது.  இதனால் மக்கள் சர்க்கரையை இருப்பு வைப்பதற்காக அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் ரஷ்யாவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் பலர் சீனியை வாங்குவதற்குகாக முந்திக்கொண்டு போட்டிபோடும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *