தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் இன்று !!

தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நுகேகொடை நகரில் இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த எதிர்ப்புப் பேரணி நடைபெறவுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளவர்கள் தெல்கந்த முதல் நுகேகொட வரை பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு பாரிய சுமையை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதே தமது நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறினார்.

அரசாங்கம் மக்களின் இன்னல்கள் தொடர்பாக உணர்வற்ற முறையில் செயற்படுவதாகவும், தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்கு ஏற்றதல்ல என்பதை நிரூபித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *