சீனாவிடமிருந்து பெறும் 1.5 பில்லியன் நிதிக்கு புதிய திட்டத்தை வகுத்தார் பசில்

சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ள 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் மற்றும் தொழிற்சாலை மூலப்பொருட்கள் இறக்குமதி செய்வதற்காக பயன்படுத்தவுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிக்கல இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவுஸ்த்திரேலியாவிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வர்த்தக அமைச்சரினால் கோரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *