உக்ரைன் விவகாரம் குறித்து பொரிஸ் ஜோன்சனுடன் கலந்துரையாடினார் மோடி!

உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சனுடன் தொலைப்பேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளார்.

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ”உக்ரைனில் நடைபெறும் போரை நிறுத்துவதற்கும், அமைதிப் பேச்சுவாா்த்தைக்குத் திரும்புவதற்குமான இந்தியாவின் கோரிக்கையை பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச சட்டம், பிராந்திய ஒருமைப்பாடு, அனைத்து நாடுகளின் இறையாண்மை ஆகியவை சமகால உலக ஒழுங்கின் அடிப்படையில் மதிக்கப்பட வேண்டும் என  மோடி தெரிவித்துள்ளார்.

அதேநேரம் வா்த்தகம், தொழில்நுட்பம்,  முதலீடு,  பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இருநாட்டு பிரதமர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலும் பிரதமா் போரிஸ் ஜான்சன் இந்தியாவுக்கு வருகை தர வேண்டுமெனவும் பிரதமா் மோடி அழைப்பு விடுத்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *