மட்டு.காத்தான்குடியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுளய்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் வழிகாட்டலில் காத்தான்குடி கடற்கரை வீதியில் (செவ்வாய்கிழமை) இரவு10 மணியளவில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது இவர் கைது செய்யப்பபட்டார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து9 கிராம் 650 மில்லி கிராம் ஐஸ் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *